Kathai Kalam

Chutti Kathaigal:

                 ஒரு  ஊரில் ராஜா என்று ஒரு பையன் இருந்தான் . அவன் மிகவும் சுட்டி. (படிப்பு, வியாளியட்டு இரண்டிலுமே ). அவனிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அவன் மிகவும் கோபக்காரனாக இருந்தான். அவன் அம்மா எடுத்து சொல்லயும் அவன் கேட்கவில்லை. 
                 ஒரு நாள் அவன் மாமா வீட்டிற்கு வந்தார். அவரிடம் ராஜாவின் அம்மா அவனது கோபத்தைப் பற்றி கூறி வருத்தப் பட்டார் . ராஜாவின் மாமா ராஜாவை கூப்பிட்டு தோட்டத்தில் உள்ள மர வேலியில் ஆணி அடிக்க சொன்னார் . ராஜாவும் ஆணி அடித்தான்.. பிறகு சிறிது நேரம் கழித்து அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னார்.. இப்போது அந்த வேலி பார்க்க மிகவும் மோசமாக இருந்தது..
                   இப்போது மாமா சொன்னார் , இதைப் போல் தான் நாம் கோபத்தில் பிறரை திட்டும் போது பிறர் மனமும் புன்னாகின்றது. இதை உணர்ந்தால் நீ பிறரை திட்ட மாட்டாய் என்று கூறினார்......


கருத்து :   ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு......
 

1 comment: